நியாயம்




முதல் நாள் மாலை ஆரம்பித்த மழை மறுநாள் காலை வரை விட்டபாடில்லை. பேத்தி அம்முவுக்கு இன்று பள்ளி விடுமுறை என்று டி.வி. செய்திகளில் வந்ததைப் பார்த்து,பார்வதி பாட்டி நிம்மதி அடைந்தாள். பேத்தியிடம் அதைச் சொல்ல, இன்னும் படுக்கையில் இருந்தே எழுந்திருக்காத அவள், மீண்டும் போர்வைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.


பேப்பர் படித்துக் கொண்டிருந்த பையன் பாலுவிடம் போனாள். ''
ண்டா, பாலு, இந்த கொட்டற மழையில ட்ரைன்,பஸ்ஸேல்லாம் சரியா போகாதுடா. மழைல போய் மாட்டிக்காதேடா. நீ ஆப்பிசுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி லீவு போட்டுடுடா" என்றாள்.


காலேஜ் படிக்கிற பேரன் ரவியிடம் போய், ''
காலேஜ் லீவுன்னு ஏதாச்சும் எஸ்.எம்.எஸ்.வந்துட்டுத்தாடா? ரோடெல்லாம் தண்ணியா இருக்கும். வண்டில போறது கஷ்டமாயிருக்கும்" என்றாள்.


ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சமையலறையில் பார்வதியம்மாள் கத்திக் கொண்டிருந்தது பாலுவின் காதில் விழுந்தது.
''இந்த வேலைக்காரிஎல்லாம் ரொம்ப மோசம். துளி மழை வந்தாலும் அதுதான் சாக்குன்னு லீவு போட்டுட வேண்டியது. எப்பப் பாரு, எதுக்கெடுத்தாலும் லீவு. இவங்கள திருத்தவே முடியாது...''





கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

இப்படியான வாழ்விலே...


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்

நான் கோவிலுக்கு போனால்

செருப்பு காணாமல் போய்விடுகிறது


நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது


நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்


நான் நேர்மையாக சம்பாதித்தால்

கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்


நான் வீடு வாங்கினால்

வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்


நான் வாகனம் வாங்கினால்

எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்


நான் ஒட்டு போட்டால்

மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்


நான் ஆசிரமத்துக்கு சென்றால்

அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது


நான் ஊழல் செய்தால்

அங்கு சிபிஐ வந்து விடுகிறது


நான் நடிகன் ஆனால்

அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்


நான் உப்பு விற்க போனால்

மழை கொட்டி தீர்க்கிறது


நான் பொரி விற்க போனால்

காற்று வீசி தீர்க்கிறது


நான் நாய் வளர்த்தால்

அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்


நான் பிள்ளையார் பிடித்தால்

குரங்காய் மாறிவிடுகிறது


நான் கதை எழுதினால்

கந்தலாக மாறி விடுகிறது


நான் கவிதை எழுதினால்

அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது.




-------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!