கமலும் பிரேமாவதியும்


வாங்க!
தலைப்பை பார்த்ததும்
ஏதோ பலான விஷயம் என நம்பி வந்தீங்களா?
ஆண்டவர் உங்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுக்கட்டும் !

இது நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற விடயம் அல்ல.
உலக நாயகனின் வாழ்வில் நடந்த ஒரு அழகான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை மயிலாப்பூர் அக்கடமியின் சார்பில்,ஆந்திர மகிள சபா,க்ளார்க் காது கேளாதோர் பள்ளி,அவ்வை இல்லம் போன்றவற்றைச் சேர்ந்து உடல் ஊனமுற்ற மாணவர்களுடன் " நேருக்கு நேர் " நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.


"என்னைப் பொறுத்தவரையில் நீங்க ஊனமுற்றவங்க இல்ல.இந்த நூற்றாண்டில் உங்களைன்னு யாராவது சொன்னா,அவங்க தேசத் துரோகிகள்!' என்று உணர்ச்சிவசப்பட்ட கமலிடம் மாணவர்கள் சரமாரியாக கேள்விகேட்டனர்.


"அப்புவா நடிச்சது எப்படி?"

"தொப்பிகுள்ள இருந்து புறா எப்படி வந்ததுன்னு கேட்டா,மந்திரவாதி சொல்லாமாட்டான்.அந்த மாதிரி தான் இதுவும்.ஆனா, இதுல மந்திரம் இல்ல...தந்திரம்தான்!"


"நீங்க
ஊனமுற்றவரா நடிச்சிருக்கீங்களா?"

"நடிச்சிருக்கன்.அதாவது படிக்காதவனா!


"உங்கள் இளமையின் ரகசியம் என்ன?" என்று ஒரு பெண் கேட்க...

''பத்து வருஷம் கழிச்சு நீங்க இதே கேள்விய கேட்டா பத்தாயிரம் ரூபா தாரேன்!" என்றார் கமல்.


"நீங்க என்னை அப்போ ஞபகம் வச்சிருப்பீங்களா?" என
அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார்.

கமல் புன்முறுவல் பூத்தார்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பெண் கமலிடம்.

"என் பெயர் ஞபகம் இருக்கா?" என்றார்.

"ஞபகம் இல்லையே..." என ஜோசித்தார் கமல்.

பத்து நிமிஷத்திலேயே இப்பிடின்னா...பத்து வருஷம் கழிச்சு மட்டும் எப்படி ஞபகம் இருக்கும்?"

"பத்து வருஷம் கழிச்சு நீங்க வந்தா, 'பிரேமாவதி' ன்னு கரெக்டா
சொல்லுவேன்!" என கமலுக்கே உரிய குறும்புடன் அவரை மடக்க,மாணவர்கள் கைதட்டலில் குஷி!




கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

யாரோ நினைக்கிறார்கள்!




ந்த
இடி சத்தத்துக்கு
அவளும் பயந்திருப்பாளோ?!


சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல


ரண்டு விசயங்கள்
மட்டும்
அப்பிடியே மனதில் நிற்கிறது
முதன் முதலில் கடல் பார்த்தது
கவிதா பார்த்தது


ரு சிங்கத்தை
காதலித்திருதால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்


விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?


து என்ன
அந்தப் புறா
சொல்லிவைத்த மாதிரி
உன்வீட்டுக்கும்
என்வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?
நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்


ன்னும்
என்ன வேண்டி
கோவிலுக்கு
வருகிறாய்?


நீ வடம்
பிடிப்பதற்க்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்


ல்ல
வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ
வகுப்பறைக்குள் வந்தாய்


தேவை இல்லாமல்
குழப்பம் விளைவிக்கிறாய்
எல்லா திருமண வீடுகளிலும்!




கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

நீலத் தாவணியணிந்த அக்கா





திருவிழாவில்

தவறிப்போன சிறுவன்
தன் அக்காவைத் தேடி
கூட்டத்தில்
அழுதுகொண்டே நிற்கிறான்

அக்கா நீலத் தாவணி
அணிந்தவள் என்பதைத் தவிர
அவனுக்குச் சொல்ல
எதுவுமே இல்லை

நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு நீல நிழலைப்போல
இந்தக் கூட்டத்தில் எங்கோ
மறைந்து நிற்கிறாள்

இத்தனை ஆயிரம் ஜனங்கள்
நடக்கும் இந்தப் பாதையில்
ஒரு நீலத் தாவணி அணிந்தவளைத்தேடி
நடையாய் நடக்கிறேன்

நீலக் கண்களுடையவளைப் பார்த்தேன்
நீலம் பாரித்த உதடுள்ளவளைப் பார்த்தேன்
நீல மலர்களைச் சூடியவளைப் பார்த்தேன்
நீலத் தழும்புள்ளவளைப் பார்த்தேன்
நீலக் கல் மூக்குத்தியணிந்தவளைப் பார்த்தேன்
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தவிர
நீலத்தோடு தொடர்புடைய
எல்லாப் பெண்களையும் பார்த்தேன்

ஒரு குழந்தை
கூட்டத்தில் காணாமல் போகிறான்
அவனது நீலத் தாவணியணிந்த அக்கா
ஆகாயத்தின் நீலத்தால் கவரப்பட்டிருக்க வேண்டும்
அல்லது கடலின் நீலத்தால் குடிக்கப்பட்டிருக்கவேண்டும்
சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான்.

நான் எனது எல்லா லட்சியங்களையும் கைவிட்டு
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தேடுகிறேன்
இந்த உலகின் மகத்தான துயரம் ஒன்றை
எப்படியும் தீர்த்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்.

நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு கடையில் நிதானமாக
இளநீர் குடித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுவன் அழுதுகொண்டே
அவளை நோக்கி ஓடுகிறான்
அவள் தனது நீலத் தாவணியால்
அவனது கண்களை சமாதானமாகத் துடைக்கிறாள்

நான் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன்
என் நீலத் தாவணியணிந்த அக்காவைத்
தொலைத்துவிட்டு...



-------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!